வட்ட வழங்கல் அலுவலகம் தரை தளத்திற்கு மாற்ற மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் தரை தளத்திற்கு மாற்ற மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-08-29 13:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலகம் பிப். 27, 2024ல் திறக்கப்பட்டது. இதில் வட்ட வழங்கல் துறை அலுவலகம் 2வது தளத்தில் உள்ளது. ரேஷன் கார்டு கேட்டு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 2வது தளத்தில் சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா உள்ளிட்ட நிர்வாகிகள், வட்ட வழங்கல் துறை அலுவலகத்தை தரை தளத்திற்கு மாற்றம் செய்ய தாசில்தாரிடம் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் சிவகுமார் கூறினார். இதில் மகளிரணி நிர்வாகிகள் சொர்ணாம்பாள், உஷா, மல்லிகா, உள்பட பலர் உடனிருந்தனர்.

Similar News