கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

Update: 2024-08-29 16:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே T3 கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாடி, TMP நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு.வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பாடி TMP நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று சந்தேக நபர்களை பிடிக்க முயற்சி செய்தபோது அதில் ஒருவர் தப்பித்துச் செல்ல, உடனிருந்த இரண்டு எதிரிகளை பிடித்து விசாரணை செய்ததில் 1) செல்வகுமார் (வ/21) த/பெ வீரப்பன். முகப்பேர் மேற்கு, சென்னை, 2) சஞ்சய் (வ/23) த/பெ ரவிகுமார். முகப்பேர் மேற்கு, சென்னை என்பதும், மேலும் அவர் வைத்திருந்த பையை சந்தேகத்தின் அடிப்படையில் முறையாக சோதனை செய்ததில் சுமார் கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது 1 கண்டுபிடிக்கப்பட்டு, கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, எதிரி இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், எதிரிகள் கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து பாடி, அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்வதாக தெரிய வந்தது. இதனை எடுத்து எதிரிகளின் மீது வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News