சேலத்தில் தேசிய விளையாட்டு தின போட்டிகள்

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Update: 2024-08-30 08:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் மாவட்டம் சார்பில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் கால்பந்து போட்டியில் 4 ஆண்கள், 4 பெண்கள் அணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். கைப்பந்து போட்டியில் 12 ஆண்கள், 7 பெண்கள் அணி வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமை தாங்கினார். கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கைப்பந்து கழக ஆலோசகர் விஜயராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.

Similar News