கந்தர்வகோட்டை கடவராயன்பட்டியை சேர்ந்த ராதிகா இவருக்கும் இவருடைய கணவர் காளிதாஸ் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி மாலை குடிபோதையில் இருந்த காளிதாஸ் விஷத்தை குடித்து மயக்கம் அடைந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். அவரது மனைவி கொடுத்த புகாரின் பெயரில் கந்தர்வகோட்டை காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.