ஊதியூர் அருகே தீப்பிடித்து மூதாட்டி பலி

ஊதியூர் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி ஊதியூர் காவல் துறை விசாரணை

Update: 2024-09-20 05:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஊதியூரை அடுத்த நிழலில் கிராமம் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் தந்தை சுப்பிராய கவுண்டர் 90, தாயார் முத்தம்மாள் 87, பெற்றோர் இருவரும் நிழலி அருகே உள்ள கரியா கவுண்டன்புதூர் பகுதியில் ஆலங்காடு தோட்டத்தில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முத்தம்மாள் தண்ணீர் காய வைப்பதற்காக அடுப்பில் தீ பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பற்றியுள்ளது. பின்னர் சேலை முழுவதும் மல மலப்ப பரவி எறிய தொடங்கியது. இதனை பார்த்த வேலை ஆட்கள் ஓடிவந்து தீயை அணைத்து முத்தமாலை காப்பாற்றினார். ஆனால் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது குறித்து கந்தசாமிக்கு தகவல் தெரிவித்தனர். முத்தம்மாள் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் உயிரிழந்தார். இது குறித்து ஊதியூர் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News