ஒன்றிய துணை சேர்மனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-09-05 18:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உளுந்தூர்பேட்டை ஒன்றிய துணை சேர்மனை கண்டித்து பி.டி.ஓ., அலுவலக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., வாக பணிபுரிந்து வருபவர் ஜெயராமன். இவரது அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சென்ற ஒன்றிய துணை சேர்மன் அலெக்சாண்டர், ரூபாய் 38லட்சம் மதிப்பிலான கழிவறை கட்டடம் கட்டுவதற்கான பணியை என்னை கேட்காமல் விடக்கூடாது என கூறியுள்ளார். இதனால் பி.டி.ஓ., ஜெயராமனுக்கும், துணை சேர்மன் அலெக்சாண்டிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பி.டி.ஓ.,ஜெயராமனை துணை சேர்மன் அலெக்சாண்டர் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. துணைச் சேர்மனின் இப்போக்கை கண்டித்து பி.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் நேற்று காலை 11 மணி அளவில் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News