அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

Update: 2024-09-06 07:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் தனராஜன் தலைமை வகித்தார். சிறந்த ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தங்கசுமதி,முதுகலை பட்டதாரி ஆசிரியர் தங்கவேல் ஆகியோருக்கு முன்னாள் மாணவர் பிரதாப் சிங் நினைவு பரிசு வழங்கினார்.மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் வைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. வட்டார வள மைய ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.*திண்டுக்கல் ஸ்ரீ காமராஜர் மெட்ரி., பள்ளியில் பள்ளி செயலர் ராமலிங்கம், பொறுப்பு முதல்வர் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் அகிலன் ஏற்பாடுகளை செய்திருந்தார். நிர்வாகிகள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்

Similar News