தாழையூத்து உபமின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு

Update: 2024-09-08 03:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி கிராமப்புற கோட்ட மின் செயற்பொறியாளர் குத்தாலிங்கம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தாழையூத்து உப மின் நிலையத்தில் நாளை(செப்.,9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News