வேலகவுண்டம்பட்டி அருகே பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை.

வேலகவுண்டம்பட்டி அருகே பள்ளி மாணவன் விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி பலியானார்.

Update: 2024-09-09 15:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்திவேலூர், செப்.9- நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள  பெரிய கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் சுதேஷ் (17).10- ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நிலையில் பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்த அவரை பெற்றோர்கள் கண்டித்ததுள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 12- ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளார். விஷம் குடித்து உயிருக்கு போராடிய மகன் சுதேஷை அவரது பெற்றோர் காப்பாற்றி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை சிகிச்சை பலனின்றி சுதேஷ் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News