நாமக்கல்லில் மறைந்த வணிகர் சங்க பேரவை தலைவருக்கு மலரஞ்சலி!

வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் நாமக்கல்லில் உள்ள பேரமைப்பு மாவட்ட தலைமை அலுவலக வளாகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வணிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2024-09-12 12:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் ஐயா த.வெள்ளையன் அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் பரமத்தி சாலையில் உள்ள பேரமைப்பு மாவட்ட தலைமை அலுவலக வளாகத்தில் அண்ணாரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வணிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.நிகழ்வில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன், இணைசெயலாளர்கள் தேவி உதயகுமார், பிரவீன்குமார்,பிரசன்னம்,ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன்,இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன், இணை செயலாளர் எவரெஸ்ட் ராஜா, இணை அமைப்பாளர் ரிஸ்வான், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவன், நகராட்சி கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் மாணிக்கம், பொருளாளர் முரளி, தினசரி காய்கறி மார்க்கெட் சங்க செயலாளர் சிவக்குமார், மளிகை மற்றும் பல்பொருள் வர்த்தகர் சங்க துணை செயலாளர் முத்துகுமார், செல் அன்பு உள்ளிட்ட இணைப்பு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News