கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

நத்தம் அருகே மனக்காட்டூர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது, 403 மதுபான பாட்டில்கள், ரூ.6000 பறிமுதல்

Update: 2024-09-17 19:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல், நத்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புறநகர் டிஎஸ்பி.சிபிசாய் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மனக்காட்டூர் பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பொன்னையா மகன் பாஸ்கரன்(54) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 403 மதுபான பாட்டில்கள், ரூ.6000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News