விஜயமாநகரம் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

திரளான பக்தர்கள் தரிசனம்

Update: 2024-09-17 18:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் புது கோவில்குப்பம் கிராமத்தில், ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று ஸ்ரீ விக்னேஸ்வரா பூஜையுடன் முதல் கால யாக பூஜையும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று, மகா பூர்ணாகதி அடைந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோபுர விமானக் கலசத்திற்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காலை 9.45 மணியளவில் மூலவர் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுந்தரமுருகன் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News