ராசிபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வாயில் முழக்க போராட்டம்..

ராசிபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வாயில் முழக்க போராட்டம்..

Update: 2024-09-12 13:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
Lநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும்,M.PHIL,PH.D பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் எனவும்,புதிய கல்விக் கொள்கையினை திரும்ப பெற வேண்டும் எனவும்,இணை பேராசிரியர் வகுத்துள்ள பணி மேம்பாட்டு பெறுவதற்கு முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும், தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 1மணி நேரத்திற்கு மேலாக 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கோசங்கள் எழுப்பி வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகள் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

Similar News