பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிருஷ்ணராயபுரம் தொகுதியில் ஆய்வு.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிருஷ்ணராயபுரம் தொகுதியில் ஆய்வு.

Update: 2024-09-12 16:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிருஷ்ணராயபுரம் தொகுதியில் ஆய்வு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தொகுதியில் உள்ள பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். மேலும், மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சிறந்த திறன்மிகு வகுப்பறைக்காக வரப்பெற்ற தொலைக்காட்சிகளை பார்வையிட்டு, அதன் விவரங்கள் குறித்து கேட்டு அறிந்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும்,பள்ளி அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்றுள்ள மாணவர்களை சந்தித்து தனது வாழ்த்துக்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Similar News