விராலிமலையில் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்!

குற்றச் செய்திகள்

Update: 2024-09-13 03:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விராலிமலை அருகே அனுமதியின்றி சரளை மண் கடத்திய டிப்பர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். விராலிமலையை அடுத்துள்ள சாரணக்குடி மேட்டுப்பட்டி அருகே அனுமதியின்றி சரளை மண் டிப்பர் லாரியில் கடத்தப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி போலீஸார் சோதனையிட்ட போது அதில் அனுமதியின்றி சரளை மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து. லாரியை பறிமுதல் செய்த போலீஸார அதன் ஓட்டுநர் பாரபட்டியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (49) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News