டிராக்டர் மோதி மின்கம்பம் சாய்ந்தது: மின் துண்டிப்பால் மக்கள் மறியல்!

பொது பிரச்சனைகள்

Update: 2024-09-13 03:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே டிராக்டர் மோதி சேதமடைந்த மின்கம்பத்தை உடனே சீரமைத்து மின்சாரம் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி கிழக்கு பகுதியில் மண் ஏற்றிச் சென்ற டிராக்டர் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால், அப்பகுதிக்கான மின்விநியோ முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், குடிநீருக்காக அப்பகுதிமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து மின்வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்தும் மின்கம்பத்தை சீரமைக்கும் பணி நடைபெறாததால், உடனே மின்விநியோகம் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து அங்கு சென்ற கீரமங்கலம் போலீஸார், மின்வாரிய அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தி ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். மறியலால் கீரமங்கலம்-ஆலங்குடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News