திசையன்விளையில் மதமாற்றம் செய்வதாக புகார்

மத மாற்றம் செய்வதாக புகார்

Update: 2024-09-13 03:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அறம் வளர்த்த அம்மன் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு, பெரியம்மன் கோயில் தெரு ஆகிய தெருக்களில் இந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நெல்லை மாநகரில் இருந்து வருகை தந்த கிறிஸ்தவ மத போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ ஊழியர்கள் அப்பகுதி இந்துகளிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து மதப் பிரச்சாரம் மற்றும் மதமாற்றம் செய்வதாக இந்து முன்னணியினர் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Similar News