விஜய் படம் ஓடிய தியேட்டரில் ஜெனரேட்டர் பழுது பணம் வாபஸ்

குமாரபாளையத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் ஓடிய திரையரங்கத்தில் ஜெனரேட்டர் பழுதடைந்ததால், பார்வையாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது.

Update: 2024-09-13 11:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது. நேற்று குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை காலை 9 முதல் மாலை 6 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெனரேட்டர் வசதியுடன் திரையரங்கம் இயக்கப்பட்டது. இந்நிலையில் மதிய காட்சிக்கு திரையரங்கில் படம் பார்ப்பதற்காக நிறைய பேர் வந்திருந்தனர். பாதி திரைப்படம் ஓடும் பொழுது தியேட்டரில் ஜெனரேட்டர் பழுதடைந்ததால் பாதியிலேயே திரைப்படம் நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் உடனடியாக திரையரங்கத்தை விட்டு வெளியேறி கூச்சலிட்டனர். திரையரங்க நிர்வாகம் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் மூலம் இயக்கப்பட்டதாகவும், தற்பொழுது ஜெனரேட்டர் பழுதடைந்ததால் மின்சாரம் வரும் வரை மீண்டும் திரையிட இயலாது என தெரிவித்துள்ளனர். டிக்கெட்டுகளை திரும்ப பெற்றுக் கொண்டு அவர்களுக்கு உரிய தொகை வழங்கப்பட்டது.

Similar News