கருப்பம்பாளையத்தில் சாலையோரம் நின்றவர் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்து.

கருப்பம்பாளையத்தில் சாலையோரம் நின்றவர் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்து.

Update: 2024-09-15 03:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கருப்பம்பாளையத்தில் சாலையோரம் நின்றவர் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்து. கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி, செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் வயது 43. இவர் செப்டம்பர் 13ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், கருப்பம்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் டெக்ஸ் நிறுவனம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் வயது 22 என்பவர் ஓட்டி வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் நின்று இருந்த முத்துக்குமார் மீது மோதுவது போல் வந்து, காரை திடீரென கட்டுப்படுத்தியதால் சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த பிரவீனுக்கு உள் காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள செந்தில் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக முத்துக்குமார் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், காரை கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்பட காரணமான பிரவீன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Similar News