பள்ளி நேரங்களில் போக்குவரத்து சீர் செய்த போலீசார்

குமாரபாளையத்தில் போலீசார் பள்ளி நேரங்களில் போக்குவரத்தை சீர் செய்தனர். பள்ளி நேரங்களில் போக்குவரத்து சீர் செய்த போலீசார்

Update: 2024-09-19 15:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில்தான் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையை கடந்து செல்கிறார்கள். போக்குவரத்து மிகுதியால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, மாணவ, மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் காயமடைந்து வந்தனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, தற்காலிகமாக பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆனங்கூர் சாலையை கடக்கும் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து சீர் செய்ய போலீசார் நியமிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர்கள் சித்ரா, உஷா, ஒன்றிய செயலர் மல்லிகா சார்பில் போலீசாருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதன்படி இன்ஸ்பெக்டர் தவமணி நடவடிக்கையின் பேரில், ஆனங்கூர் பிரிவு சாலையில் பள்ளி நேரங்களில் போலீசார் போக்குவரத்து சீர் செய்து வருகிறார்கள். மாணவ, மாணவியர் தற்போது அச்சமில்லாமல் சாலையை கடந்து சென்று வருகிறார்கள். இந்த இடத்தில் நடை மேம்பாலம் அமைக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News