சாய்ந்து கிடந்த மின் இணைப்பு பெட்டியை சீர் படுத்திய மின்வாரிய பணியாளர்கள்

குமாரபாளையம் மின்வாரிய பணியாளர்கள் சாய்ந்து கிடந்த மின் இணைப்பு பெட்டியை சீர் படுத்தினர்.

Update: 2024-09-19 15:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை போலீஸ் ஸ்டேஷன் அருகே சாலை வளைவில் புதைவட மின் இணைப்பு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இது வாகனங்கள் திரும்பும் இடம் என்பதால் சிறுக, சிறுக வாகனங்கள் மோதியதால் கீழே சாய்ந்தது. இந்த இடத்தில் இருக்கும் இந்த மின் இணைப்பு பெட்டியை வேறு இடத்தில் மாற்றியமைக்கவும், கீழே சாய்ந்து கிடக்கும் இந்த பெட்டியை சீர் பாடுத்தவும் வேண்டி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதன்படி மின்வாரிய பணியாளர்கள், சாய்ந்து கிடந்த மின் இணைப்பு பெட்டியை சீர்படுத்தினர்.

Similar News