இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நகர காவல் துறை கடும் எச்சரிக்கை!
குற்றச்செய்திகள்
புதுக்கோட்டை மாலையிடு கீழ விளாக்குடி, தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த இருதயராஜ் மகன் ஜான் பிரிட்டோ 23 அப்பகுதியில் மிக அதிக சத்தத்துடன் மிக அபாயகரமான வேகத்தில் செல்வதால் பொதுமக்கள் ஒருவித அச்சுறுத்தலை ஏற்படுத்திய காரணத்தினால் நகர காவல் ஆய்வாளர் மருது கவனத்திற்கு வந்ததை எடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் மேற்படி ஜான் பிரிட்டோ கைது செய்து சிறையில் அடைத்தனர் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் மேலும் இதுபோன்று இளைஞர்கள் யாரேனும் அச்சுறுத்து வகையில் இரு சக்கர வாகன ஓட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர காவல் துறை ஆய்வாளர் மருது தெரிவித்துள்ளார்