கடல் குதிரைகள் பறிமுதல்: இருவர் கைது!

குற்றச் செய்திகள்

Update: 2024-09-21 04:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடா கடல் பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினமான கடல் அட்டை, கடல் குதிரை ஆகியவற்றை விற்பனைக்காக வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் முத்துக்குடா பகு தியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கடல் அட்டைகள், கடல் குதிரைகளை வாளியில் வைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற முத்துக்குடா பகுதியை சேர்ந்த ராக்கப்பன்(57), தூண்டிமுத்து(51) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கடல் அட்டைகள், 3 கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப் பட்டன.

Similar News