திருப்பத்தூரில் கார் மோதி 5 பேர் படுகாயம்

திருப்பத்தூர் அருகே கார் டயர் கழண்டு அடுத்தடுத்து மூன்று இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம் போலீசார் விசாரணை

Update: 2024-09-21 05:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் அருகே கார் டயர் கழண்டு அடுத்தடுத்து மூன்று இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம் போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு மண்குன்றுமலையில் உள்ள திருக்கோயிலில் பெங்களூர் பகுதியை சேர்ந்த அருண் என்பவர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து விட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்த போது. திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை வெங்களாபுரத்தில் கார் முன்பக்க டயர் கழண்டு அடுத்தடுத்து மூன்று இருச்சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது இருசக்கர வாகனத்தில் சென்ற ராச்சமங்களம் பகுதியை சேர்ந்த வாசு(45), பெரியார் நகர் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் (36) அவரது மனைவி ரஞ்சிதா (31), மகன் ஹரீஷ்(9), புதூர்நாடு வலுதளம்பட்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் பரமசிவம் (21) ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் அருகே கார் டயர் கழண்டு அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்களின் மீது மோதி 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Similar News