தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-09-21 04:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் மயிலாம்பாறை மாரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயராமன், பொருளாளர் ராஜமாணிக்கம், ரவி, அபுபக்கர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை நடந்ததை கண்டித்தும், சங்கராபுரம் அடுத்த செட்டியந்தல கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் வழியில் ஆற்றுபாலம் அமைக்க வேண்டும். பாலப்பட்டு - கள்ளிப்பட்டு துரூர் வரை தார்சாலை அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

Similar News