மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேக வாகனங்களை கட்டுப்படுத்த கோரிக்கை!

பொது பிரச்சனைகள்

Update: 2024-09-21 04:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மணமேல்குடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு பள்ளிகள், வங்கிகள், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு பல்வேறு பணிகளுக்காக தினமும் 1,000க்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர் இதனால் காலை, மாலை நேரங்களில் தண்டலை நான்கு ரோடு, பெண்கள் பள்ளி, சந்தப்பேட்டை ஆகிய இடங்களில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதற்கிடையே மணமேல்குடி வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதை தவிர்க்க காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News