அரசு மருத்துவமனையின் சார்பில் எய்ட்ஸ் பாதுகாப்பு விழிப்பணர்வு பேரணி.‌‌!

சங்ககிரி: அரசு மருத்துவமனையின் சார்பில் எய்ட்ஸ் பாதுகாப்பு விழிப்பணர்வு பேரணி....

Update: 2024-09-21 15:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை சார்பில் எச்ஐவி எயிட்ஸ் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி சங்ககிரியில் நடைபெற்றது. சங்ககிரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணகுமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். சங்ககிரி, வி.என்.பாளையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி பவானி பிரதான சாலை வழியாக சென்று திருச்செங்கோடு பிரிவு சாலையில் நிறைவடைந்தது. பேரணியில் சங்ககிரி, வீராச்சிப்பாளையம் தனியார் பொறியியல் கல்லூரிகள், மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் இதில் கலந்து கொண்டு கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். பேரணிக்கு முன்னர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. சங்ககிரி நம்பிக்கை மைய பணியாளர்கள் சேலம் மாவட்ட பொது தொண்டு நிறுவனங்களின் திட்ட மேலாளர்கள், மேற்பார்வையாளர், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Similar News