காவலர்கள் குடும்பத்தார்களுக்கு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்

காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தார்களுக்கு உடல் மருத்துவ பரிசோதனை முகாம்

Update: 2024-09-22 13:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல், சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று திண்டுக்கல் நகர் ASP.சிபின் முன்னிலையில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆனந்த் மற்றும் மாலதி ஆகியோரின் பங்களிப்புடன் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தார்களுக்கு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவலர்களுக்கு இரத்தம் மற்றும் இதயத்துடிப்பு பரிசோதனை செய்யப்பட்டு உடல் ஆரோக்கியம் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் நகர் உட்கோட்ட ASP.சிபின் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ராஜன் உள்ளிட்ட காவல் துறையினர் உடல் பரிசோதனை செய்து கொண்டார்கள்.

Similar News