மங்கலம்பேட்டை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

திரளான பக்தர்கள் தரிசனம்

Update: 2024-09-22 17:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இன்று கிருத்திகை தினத்தை முன்னிட்டு பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனை நடக்க திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Similar News