ஊமங்கலம், மேலப்பாளையூரில் நாளை மின் நிறுத்தம்

செயற்பொறியாளர் தகவல்

Update: 2024-09-22 18:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட ஊ.மங்கலம் பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை  24 ந் தேதி அன்று செவ்வாய்க் கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யும் கங்கைகொண்டான், ஊ.அகரம், ஊ. கொளப்பாக்கம், கொள்ளிருப்பு, இருப்புக்குறிச்சி, ஊத்தங்கால், ஊ.மங்கலம், சமூட்டிகுப்பம், அம்மேரி, அரசக்குழி, காட்டுக்கூனங்குறிச்சி, பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், அம்பேத்கார் நகர், வி. குமாரமங்கலம், கோபாலபுரம் ஆகிய கிராம பகுதிகளுக்கு மின்வினியோகம் நிறுத்தப்படும். இதே போல விருத்தாசலம் கோட்டம் மேலைப்பாளையூரில் அமைந்துள்ள  மேலைப்பாளையூர் துணைமின்நிலையத்தில் 24 ந் தேதி  அன்று காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மேலப்பாளையூர், தே.பவழங்குடி, சி.கீரனூர், ஏ.வல்லியம்,  கம்மாபுரம், சு.கீணனூர், கோபாலபுரம், தேவங்குடி, கீழப்பாளையூர், காவனூர், க.தொழூர், மருங்கூர் கிராமங்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு விருத்தாசலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News