அண்ணனூரில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் ரயில் சேவை பாதிப்பு

அண்ணனூரில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் ரயில் சேவை பாதிப்பு

Update: 2024-09-24 04:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அண்ணனூரில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் ரயில் சேவை பாதிப்பு ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தையொட்டி செல்லும் மின் கம்பிகள் சரி செய்யும் பணி நடைபெற்ற நிலையில் திடிரென தண்டவாளத்தையொட்டி பள்ளம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரமாக ஆவடியில் இருந்து செனட்ரல் மற்றும் செனட்ரலில் இருந்து ஆவடி நோக்கி செல்லும் மின்சார ரயில் சேவைகள் பாதிப்பு, இதன் காரணமாக, மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் விரைவு ரயில்கள் நிற்கும் நடைமேடை இல்லாத பட்டாபிராம், இந்து கல்லூரி, அண்ணனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்காமல் சென்றது. இதனால், வேலை, பள்ளி, கல்லூரி செல்வோர் கடும் அவதிப்பட்டனர். ரயில்வே ஊழியர்கள் துரிதமாக சரி செய்தப்பின் இயல்பு நிலைக்கு திரும்பிய ரயில் சேவை

Similar News