தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

பள்ளிபாளையத்தில் தூய்மை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Update: 2024-09-24 12:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் அருகே செவ்வான்று நடைபெற்றது.  இந்த நிகழ்விற்கு நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், ஆகியோர் தலைமை தாங்கினர். நகராட்சி கமிஷனர் தாமரை முன்னிலை வகித்தார்.  இந்த நிகழ்வில் நாட்டுப்புற கலைஞர்கள் பறை இசையுடன்,  கலை நிகழ்ச்சி மற்றும் நடனம் மூலம் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தனியார் கல்லூரி, மாணவ மாணவியர் நகராட்சி தூய்மை பணியாளர்கள்,  நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியபடி பள்ளிபாளையம் பேருந்து நிலையம்" ராஜவீதி, குமாரபாளையம் சாலை, சங்ககிரி சாலை என முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று மீண்டும் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பேரணி நிறைவு பெற்றது.நகராட்சி உறுப்பினர்கள்  நகராட்சி சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், நகராட்சி பொறியாளர் ரேணுகா, சந்தோஷ் ,தூய்மை பணியாளர்கள் அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Similar News