கரூரில், கருப்பு பட்டை அணிந்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூரில், கருப்பு பட்டை அணிந்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-09-24 12:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில், கருப்பு பட்டை அணிந்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் கருப்பு பட்டையை அணிந்து பணி செய்து, கண்டன ஆர்ப்பாட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மாநில துணைத்தலைவர் சக்திவேல் மாவட்ட அமைப்பு செயலாளர் மனோகரன் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் அமலி டெய்சி, மாவட்டம் மகளிர் அணி செயலாளர் சண்முக வடிவு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, கடந்த ஓராண்டாக சிறுசிறு பிரச்சனைகளை காரணம் காட்டி, தொடர்ச்சியாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் செய்யப்படுவதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News