முன் பகை காரணமாக ரவுடி பட்டப்பகலில் வெட்டி படுகொலை

திண்டுக்கல் அருகே முன் பகை காரணமாக ரவுடி பட்டப்பகலில் வெட்டி படுகொலை போலீசார் விசாரணை

Update: 2024-09-25 14:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் அருகே காப்பிளியப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் ஹேமதயாள வர்மன் இவர் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை நடத்து வருகிறார். இவருக்கு நாகஜோதி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது கொலை மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மா மு கோவிலூர் அருகே உள்ள அம்மா குளக்கரையில் இன்று 25.09.24 மதியம் பட்டப்பகலில் ஹேம தயாள வர்மனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளல் கத்தி போன்ற ஆயுதங்களால் தலை மற்றும் உடல் என பல இடங்களில் வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முன் பகை காரணமாக இந்த படுகொலை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News