கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா

அமைச்சர்கள் பெரியகருப்பன் சி.வெ. கணேசன் பங்கேற்பு

Update: 2024-09-25 17:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் கூட்டுறவுத் துறை சார்பில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கருவேப்பிலங்குறிச்சியில் நடந்தது. கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பதிவாளர் சுப்பையன், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார், மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், இணைப்பதிவாளர் மேலாண் இயக்குனர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சத்தியவாடி ஊராட்சி மன்ற தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான வேல்முருகன் வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு கருவேப்பிலங்குறிச்சியில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, 235 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைச்சர் சி வி கணேசன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், எம்எல்ஏக்கள் விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், நெய்வேலி ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மெஹ்மூத், தாசில்தார் உதயக்குமார், முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், திமுக ஒன்றிய செயலாளர்கள் கனக.கோவிந்தசாமி, பாவாடை கோவிந்தசாமி, சுரேஷ், நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஒன்றிய குழு தலைவர் மலர், மற்றும் திமுக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News