அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் அட்டைகள் வளங்கள்

நிகழ்வுகள்

Update: 2024-09-27 03:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்துக்காக வெளிநாடுகளுக்குச் சென்று தங்கியுள்ள அயலகத் தமிழர்கள் 100 பேருக்கு, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரியத்தின் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் எம்எம். அப்துல்லா இவற்றை வழங்கினார். இந்த அட்டைகளைக் கொண்டு, கல்வி உதவி, திருமண உதவி, ஓய்வூதியம், காப்பீடு போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், நல வாரியத்தின் உறுப்பினர் பெ. தெய்வானை, மாவட்ட முன்னோடி வங்கிமேலாளளர் த. நந்தகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Similar News