செய்தித்துறை அமைச்சரை சந்தித்து பிரஸ் கிளப் நிர்வாகிகள் மனு!

தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த செய்தித்துறை அமைச்சரை சந்தித்து தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகை விலை வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2024-09-27 17:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த செய்தித்துறை அமைச்சரை சந்தித்து தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகை விலை வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது குறித்து கோரிக்கை மனு அளித்தனர். நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வருகை தந்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களை தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் அதன் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து செயலாளர் மோகன்ராஜ் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகை விலை வீட்டுமனை பட்டா தூத்துக்குடியில் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டி மனு அளித்தார். இக்கோரிக்கையை கனிவாக கேட்டறிந்த அமைச்சர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகளிடம் உறுதியளித்தார். இந்நிகழ்வில் பொருளாளர் ராஜு, இணைச் செயலாளர் சதீஷ்குமார், கௌரவ ஆலோசகர் ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர் முத்துராமன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News