கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-09-28 07:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் ஆணையர் மாநில உறுப்பினர் சம்பத், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருள் தந்தை ஜோ அருண், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாநகராட்சி மேயர் கவிதா, மாநகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இளங்கோ உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், சிறுபான்மையினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர்க்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், சலுகைகள், அரசின் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பயனளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

Similar News