விழுப்புரத்தில் ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது

Update: 2024-09-28 09:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டையில்லாட்டரி சீட்டு விற்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார், நேற்று ராகவன்பேட்டை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி இந்துமதி, 27; விழுப்புரம் சிதம்பரம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த சாரங்கபாணி, 52; சிறுவந்தாடு மோட்சகுளம் கோபால்சாமி, 33; ஆகியோர், வாடகை வீடு எடுத்து, ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.இதனையடுத்து, இந்துமதி, சாரங்கபாணி, கோபால்சாமி ஆகிய 3 பேர் மீதும், வழக்குப் பதிந்து, அவர்களை நேற்று கைது செய்து, 2 மொபைல் போன், ஒரு பைக், லேப்டாப், ஆன் லைன் லாட்டரி சீட்டு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

Similar News