தப்பியோடிய குற்றவாளி ஒருவருக்கு கை மற்றவருக்கு கால் முறிவு

வேடசந்தூரில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் ஆயுதங்கள் பறிமுதல் செய்ய சென்ற போது தப்பியோடிய குற்றவாளிகளுக்கு ஒருவருக்கு கை மற்றவர்களுக்கு கால் முறிவு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி

Update: 2024-09-28 08:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல், வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசிபெரியண்ணா என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுமோகன், சரவணன் ஆகிய 2 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய போலீசார் பெரியகவுண்டம்பட்டி அருகே உள்ள பெரியகுளம் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது 2 பேரும் காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர் போலீசார் அவர்களை பிடிக்க முயற்சித்த போது தவறி கீழே விழுந்து மதுமோகனுக்கு வலது கை எலும்பு உடைந்தது. சரவணனுக்கு கீழே விழுந்து இடது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து மாவுக்கட்டு போடப்பட்டது.

Similar News