அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் அமமுக கட்சியினர் திமுகவில் ஐக்கியம்!

தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Update: 2024-09-29 07:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும் - 4வது வட்ட பிரதிநிதியுமான கண்ணன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது உடன் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர அவைத் தலைவர் ஜேசுதாஸ், பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், பகுதி பொருளாளர் உலகநாதன், வட்டச் செயலாளர் சதீஷ், மாமன்ற உறுப்பினர்கள் தெய்வேந்திரன், நாகேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோர் இருந்தனர்.

Similar News