பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்

பாஜக கவுன்சிலர் தொடர்ந்து வழக்கில் திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள 34 கடைகளின் ஏலத்தை ரத்து செய்ததோடு மறு ஏலம் நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை அடுத்து திண்டுக்கல்லில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-10-01 19:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினர் தனபாலன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 34 கடைகள் கடந்த 2022ம் ஆண்டு நவ.17-ல் ஏலம் விடப்பட்டது. தமிழ்நாடு வெளிப்படையான ஏல - அறிவிப்பு சட்டத்தின் கீழ் ஏல அறிவிப்புகளை - உள்ளூர் நாளிதழ்களில் - விளம்பரம் செய்ய வேண்டும். அதிக தொகைக்கு ஏலம் கேட்ப வர்களுக்கு ஏலம் வழங்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் இந்த விதியை அதிகாரிகள் பின்பற்றவில்லை. இதனால் 34 கடைகள் ஏல ஒதுக்கீட்டை ரத்து செய்து விதிப்படி அறிவிப்பு வெளியிட்டு ஏலம் விட உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் - சுப்பிரமணியன், விக்டோரி யாகவுரி ஆகியோர் - விசாரித்து தீர்ப்பு வழங்கி னர். அதில் திண்டுக்கல் மாநகராட்சி க்கு சொந்தமான 34 கடைகள் ஏலம் விடப்பட்டதில் தமிழக அரசின் வெளிப்படையான டெண்டர் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் 34 கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அப்படி கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் அவற்றிற்கு சீல் வைக்க வேண்டும் மார்ச் 23 திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இன்று இறுதித் தீர்ப்பினை வழங்கிய நீதிபதிகள் ஏற்கனவே முறைகேடாக நடத்திய 34 கடைகளில் ஏழத்தை ரத்து செய்து சட்ட விதிகளின்படி புதிதாக மறு ஏலம் விட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இதனை கொண்டாடும் விதமாக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பாக பாஜகவினர் மற்றும் மாமன்ற உறுப்பினர் தனபாலன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News