பள்ளி மாணவியை தாக்கிய இரண்டு பேர் கைது!

குற்றச் செய்திகள்

Update: 2024-10-05 04:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பள்ளி மாணவியை தாக்கிய ஊராட்சித் துணைத் தலைவர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் வீரையா(46). ஊராட்சி துணைத் தலைவரான இவர், கடந்த மாதம் முன்விரோதம் காரணமாக பிளஸ் 2 பயிலும் மாணவியை தாக்கி, ஆடையை கிழித்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்குப் பதிந்து வீரையா, அதே பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன், மணிவாசகம் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து மணிவாசகத்தை அண்மையில் கைது செய்து சிறையிலடைத்தனர்.தொடர்ந்து தலைமறைவாக இருந்த வீரையா, பிரகதீஸ்வரன் ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News