கோவிலில் அன்னதானத்தை துவங்கி வைத்த எம்எல்ஏ

தசரா திருவிழாவை முன்னிட்டு அன்னதானம்

Update: 2024-10-06 03:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாநகர பாளையங்கோட்டை யாதவர் உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் தசரா திருவிழா நடைபெற்று வருகின்றது. இதனை முன்னிட்டு கோவில் அன்னதான அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப், மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

Similar News