குடகனாறு பாலத்தில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். முதியவர் படுகாயம்.

குடகனாறு பாலத்தில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். முதியவர் படுகாயம்.

Update: 2024-10-06 09:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குடகனாறு பாலத்தில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வேலன் செட்டியூர் அருகே உள்ள இந்திரா காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் வயது 65. இவர் அக்டோபர் 3-ம் தேதி மதியம் 2:30 மணி அளவில், நத்த நாயக்கனூரில் இருந்து கூம்பூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். வழியில் உள்ள குடகனாறு பாலத்தில் செல்லும்போது, எதிர் திசையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், வெள்ளையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி வயது 59 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், ராஜகோபால் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் ராஜகோபாலுக்கு இடது கண் புருவம், இடது கை மற்றும் இடது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜகோபால் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

Similar News