நெல்லையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள பகுதி மக்களுக்கு நிரந்தர வீடு இல்லாததால் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். மழை பெய்யும் பொழுதெல்லாம் நரிக்குறவர்கள் இவ்வாறு அவதி அடைந்து வருவதால் இதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.