சாலை விபத்து தாய் மகன் இருவருக்கு நேர்ந்த சோகம்

சங்ககிரி: மகுடஞ்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்து... தாய் மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலி....

Update: 2024-10-07 17:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் தாய்,மகன் இவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.... நாமக்கல் மாவட்டம் வெப்படை இலந்தகுட்டை பகுதியைசேர்ந்த சுலோச்சனா இவரது மகன் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி அருகேயுள்ள காளி கவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஈரோட்டிலிருந்து சேலத்தை நோக்கி வந்த தனியார் பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில் தாய்,மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த மகுடஞ்சாவடி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர்.வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News