ஜமீன் இளம்பிள்ளை அருகே புதிய ரேஷன் கடை திறந்து வைத்த மதராஸ் செந்தில்

பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே உள்ள ஜமீன் இளம்பிள்ளை ஊராட்சியில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார் மதுரா செந்தில்.

Update: 2024-10-08 13:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர் அக்.08: பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கபிலர்மலை ஒன்றியம், ஜமீன் இளம்பிள்ளை ஊராட்சியில் இ.நல்லாகவுண்டம்பாளையம் கிராமத்தில் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 14 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், நகர் அமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கபிலர்மலை ஒன்றிய செயலாளர் அட்மா தலைவருமான கே.கே.சண்முகம், ஒன்றிய குழு உறுப்பினர் வளர்மதி சுப்பிரமணியம், சசிகலா, ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி தங்கவேல், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாலதி,கழக சார்பு அணியை சார்ந்த சுப்பிரமணியம், சண்முகம், கிளைக் கழக செயலாளர்கள் பழனிச்சாமி சதாசிவம் தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News