பரமத்தி வேலூர் தினசரி பூமாக்காட்டில் பூக்கள் விலை உயர்வு.

பரமத்திவேலூரில் தினசரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-10-08 14:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர் அக். 08: பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பட்டி,குப்புச்சிபாளையம்,அண்ணாநகர்,குஞ்சாம்பாளையம்,ஆனங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான பூக்களை விவசாயில் பயிர் செய்துள்ளர். அங்கு விளையும் பூக்களை பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.  கொண்டுவந்த பூக்களை பரமத்தி வேலூல் பகுதியில் உள்ள பூ வியாபாரிகள் வந்து ஏலம் கூரி வாங்கி செல்வது வலக்கம். இன்று நடைபெற்ற பூக்கள் ஏலத்தில்  கிலோ ஒன்று குண்டு மல்லிகை பூ 600-க்கும்,சம்பங்கிபூ-250-க்கும்,அரளி பூ- 400-க்கும்,ரோஸ் பூ-300-க்கும்,பன்னீர் ரோஸ் 200-க்கும் செவ்வந்தி பூ-250-க்கும்,முல்லை பூ 600-க்கும்,கனகாம்பரம் 600-க்கும் ஏலம் போனது. ஆயுத பூஜை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் பூக்கள் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News