வெள்ளிச்சந்தை:  விமானத்தில் ஊர் திரும்பிய இளம் பெண் மாயம் 

சிங்கப்பூரில் இருந்து

Update: 2024-10-10 07:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சகாயராஜன் மனைவி மேரி சுகந்தி (45). மேரி சுகந்தியும் இவரது மகள் சகாய தர்ஷினி (21) ஆகிய இரண்டு பேரும் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஆங்கில மருந்து கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.       கடந்த 4- ம் தேதி இரவு மேரிசுகந்தி தூங்க செல்லும் போது மகள் சகாயதர்ஷினி செல்போனில் சாட்டிங் செய்து கொண்டிருந்தாராம். இதை பார்த்த அவரது தாய் மேரி சுகந்தி மகளை கண்டித்துள்ளார். மறுநாள் காலை சுமார் 8 மணி அளவில் மேரி சுகந்தி  வேலைக்கு செல்லும் போது, சகாயதர்ஷினி முதலில் செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். பின்னர் மேரி சுகந்தி வேலைக்கு சென்றுள்ளார்.       நண்பகலாகியும் சகாயதர்ஷினி வேலைக்கு போகவில்லை. இதனால் தாய் மேரி சுகந்தி மகளை பல்வேறு இடங்களில் தேடி சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட போது, சகாயதர்ஷினி மதுரை விமானம் மூலம் ஊருக்கு திரும்பியதாக தகவல் கிடைத்தது.        உடனே மேரி சுகந்தியும் விமான மூலம் ஊருக்கு திரும்பி வந்தார். ஊரில் அம்மா மற்றும் உறவினர்கள் வீடுகள் என பல இடங்களில் தேடியும் சகாய தர்ஷினி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து பதற்றம் அடைந்த மேரி சுகந்தி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News